சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான அறிவிப்பு !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 22ஆம் திகதி  அறக்கட்டளையில் வெளியிடப்படவுள்ளதாக சட்டத்தரணி அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில்  (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொள்கை இல்லாத குழுவினால் அரசாங்கத்தை நடத்த முடியாது எனவும், அரசாங்கத்தை நடத்த திறமையான தலைவர், குழு மற்றும் கொள்கை தேவை எனவும், அந்த காரணிகள் ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனக்கு பட்டம் பதவிகளில் ஆசைகள் இல்லாத காரணத்தினால் தான் அதிகாரத்திற்கு வந்த உடனே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாது செய்து நாடாளுமன்றத்தை மையமாகக் கொண்ட ஜனநாயக ஆட்சி முறையை உருவாக்குவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (P)


Related Posts