மட்டு. மறை மாவட்டத்திற்கு புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகர் நியமனம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக அருட்கலாநிதி என்டன் ரஞ்சித் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸினால் நேற்று (19) இப்பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அவர், தேசிய கத்தோலிக்க இளைஞர் சம்மேளனத்தின் பொறுப்பு ஆயராகவும், கொழும்பு மறை மாவட்டத்தின் துணை ஆயராகவும் பணியாற்றி வருகின்றார்.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா சுகவீனம் காரணமாக குறித்த பதவிக்கு ஆயர் என்டன் ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது ஆயர் ஜோசப் பொன்னையா உடல்நலக் காரணங்களுக்காக இராஜினாமா செய்தார். (P)


Related Posts