மலேசியாவில் குழிக்குள் விழுந்த இந்திய பெண்ணைத் தேடும் பணி தீவிரம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவை சேர்ந்த விஜய லட்சுமி கலி  மலேசியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், 8 மீட்டர் ஆழமுள்ள குழிக்குள் விழுந்து காணமல் போனதாக அங்குள்ள செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. அவர் கோயிலில் காலை உணவுக்காக நடந்து சென்ற போது பூமி திடீரென உள்வாங்கி குழி ஏற்பட்டுள்ளது. அதில் அவர் விழுந்துள்ளர்.

இப்போது விஜய லட்சுமி கலியைத் தேடும் பணிகள் தொடர்ந்து வருவதாக அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். தூதரகத்தின் கூற்றுப்படி, தேடுதல் மற்றும் மீட்பு குழு காணாமல் போன இந்திய பெண்ணை தேடுவதற்கான புதிய பாதைகள் மற்றும் சாத்தியமான வழிகளை கண்டறிந்து வருகின்றனர்.

வடிகால் அமைப்பின் பகுதிகளை சுத்தப்படுத்திய பின்னர், தடைகளை அகற்ற உயர் அழுத்த தண்ணீர் ஜெட், ரிமோட் காமிராக்கள், மற்றும் அடையமுடியாத இடங்களைக் கண்டடைய ரேடார்கள் போன்ற சிறப்பு தொழில்நுட்பங்களுடன் தேடுதல் பணி தொடர்கிறது.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை | Thedipaar News

Related Posts