தேர்தல் விடுமுறை தொடர்பாக ஆணைக்குழு அறிக்கை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


பல்கலைக்கழகங்களின் பணியாட் குழுவினருக்கும் மாணவ மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இலகுபடுத்தும் வகையில் விடுமுறை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அரச பல்கலைக்கழகங்களின் கீழ் அடங்காத தனியார் பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி நிறுவகங்களும் தமது பணியாட்குழுவினருக்கும் மாணவ மாணவிகளுக்கும் இந்த வாக்கெடுப்பின் போது வாக்களிப்பதை இயலச் செய்யும் வகையில் விடுமுறை வழங்குவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச மற்றும் தனியார் துறைகளில் சம்பளம் மற்றும் சொந்த விடுமுறையினை இழக்காத வகையில் வாக்கினை அளிப்பதற்குச் சந்தர்ப்பத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. (P)

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணம் | Thedipaar News

Related Posts