இரட்டை கொலையுடன் தொடர்புடையவர் ரொறன்ரோவில் பதுங்கல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

34 வயதான பிலிப் கிராண்ட் என்ற நபர் இடாபிகாக் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் இறந்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றிருந்தது.

 குறித்த நபரை 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொலிஸார் அடையாளம் கண்டனர். பீல் பிராந்தியத்தைச் சேர்ந்த இந்த கிராண்ட் என்ற நபர் அண்மைய நாட்களில் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த நபரின் புகைப்படம் ஒன்றையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபரை யாரேனும் கண்டால் போலீசாரைக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சந்தேக நபர் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மது விற்பனை நிலையத்தை மூடுமாறு ரிஷாட் கோரிக்கை | Thedipaar News

Related Posts