யோர்க்கில் மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

யோர்க் பிராந்தியத்தில் 22 ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராக கடமையாற்றி வரும் 47 வயதான ஆசிரியர் தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பதின்ம வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 5ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரொறன்ரோவை சேர்ந்த டோனி பனிக்கியா என்ற 47 வயது ஆசிரியரே இந்த குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இந்த ஆசிரியருக்கு எதிராக சுமார் 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 இந்த ஆசிரியர் வேறு மாணவர்களையும் தகாத செயற்பாடுகளுக்கு உட்படுத்தி இருப்பார் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Related Posts
©   Thedipaar

எகிறியது எண்ணை விலை

©   Thedipaar

கனடாவில் அவசரநிலை