Font size:
Print
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை வௌ்ளிக்கிழமை (04) சந்தித்து, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் உறவை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.
இந்த சந்திப்பின் போது, அண்டை நாடுகளுக்கு இடையே நிலவும் கூட்டாண்மையை ஆழப்படுத்தும் நோக்கில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சந்திப்பைத் தொடர்ந்து, கலாநிதி ஜெய்சங்கர் தனது உணர்வுகளை சமூக ஊடக தளமான ‘X’ இல் வெளிப்படுத்தினார், ஜனாதிபதி திஸாநாயக்கவின் கொழும்பு விஜயத்தின் போது அவரைச் சந்திப்பது ஒரு "கௌரவம்" என்று குறிப்பிட்டார். (P)
Related Posts