ஒரே புகைப்படத்தில் ஊர் வாயை அடைத்த சூர்யா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்தில் சிவகுமாரின் மகன் என்ற அடையாளத்தோடு நடிக்க வந்தவர் இன்று முன்னணி நடிகராக முன்னேறியுள்ளார் என்றால் அதற்கு அவரது உழைப்பு மட்டுமே காரணம். பல வெற்றி படங்களை கொடுத்து சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர். தற்போது, சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் கங்குவா படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் ஷூட்டிங் முடித்தவுடனே அவரது காதல் மனைவியும், நடிகையுமான ஜோதிகாவை காண சென்றுள்ளார். இவர்கள் இருவரும் மும்பை விமான நிலையத்தில் ஜோடியாக இணைந்து வந்துள்ளனர். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

சமீப காலமாக, இந்த காதல் ஜோடி குறித்து வரப்பட்ட ச*ர்ச்சைகளுக்கு இடையே தற்போது, இவர்கள் இருவரையும் இணைத்து பார்ப்பதில் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. என்ன ச*ர்ச்சை என்றால் சூர்யா தன்னுடைய அப்பா அம்மாவை பிரிந்துவந்து மும்பையில் வீடு வாங்கியது சிவகுமாருக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் வதந்திகள் வந்த நிலையில் இவர்களது ஒன்றாக உள்ள புகைப்படம் எல்லா ச*ர்ச்சைக்கும் முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

Related Posts