ரொறன்ரோவில் மதுபானம் களவாடிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோவில் மதுபானம் களவாடிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் மூன்று போத்தல் மதுபான வகைகளை குறித்த நபர் களவாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 39 வயது டெனியல் என்ற போலிஸ் கான்ஸ்டபில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மதுபான கடை ஒன்றுக்குள் புகுந்து மூன்று மதுபான போத்தல்களை எடுத்துக்கொண்டு பணம் செலுத்தாத அங்கிருந்து சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related Posts