Oshawa பகுதியில் ஏடிஎம் இயந்திரங்களை களவாடிய பெண்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஓஷாவாவில் திருடப்பட்ட ஏடிஎம் ஒன்றைக் கண்டுபிடித்ததாக போலீசார் கூறியதை அடுத்து இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டர்ஹாம் பிராந்திய போலீஸ் சேவைக்கு வின்செஸ்டர் ரோடு கிழக்கு மற்றும் சிம்கோ ஸ்ட்ரீட் வடக்கு பகுதிக்கு அதிகாலை 1 மணியளவில் அவசர அழைப்பு வந்துள்ளது. 

சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்தபோது, ​​வாகனம் நிறுத்தும் இடத்தில் ஒரு வேன் மற்றும் பிக்கப் டிரக் இருப்பதைக் கண்டனர். அவர்கள் வந்தவுடன் பிக்கப் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டதாகவும், வேன் அப்படியே இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கைதான பெண்கள் பெண்கள் பிக்கப் ட்ரக் வண்டியை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை தரையிலிருந்து பிடிங்கி, இழுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

30 வயதான சபரினா வாரேன் மற்றும் 33 வயதான எலிசபெத் மெக்ராலின் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவருக்கும் எதிராக 11 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

குறித்த வேன் ஸ்காபரோவில் இருந்து திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

Related Posts