இரத்தினபுரி - கொழும்பு வீதியில் பேருந்து தீக்கிரை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இரத்தினபுரி - கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே பகுதியில் தனியார் பேருந்து ஒன்று இன்று (10) காலை தீப்பற்றி எரிந்துள்ளது.

இன்று காலை 07.30 மணியளவில் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

எனினும், இந்த தீ விபத்தில் உயிரிழப்புக்களோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

தற்போது தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  (P)


Related Posts