சீரற்ற காலநிலை ஏற்படுத்திய சேதங்கள்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களின் 69 பிரதேச செயலகங்களிலுள்ள 1,00,000துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 03 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 34,492 குடும்பங்களைச் சேர்ந்த 1,34,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

240 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் 1,753 குடும்பங்களைச் சேர்ந்த 6,963 பேர் தற்போது 81 பாதுகாப்பு இடங்களில் தங்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கடும் மழை காரணமாக களு, களனி, கிங் கங்கைகள் மற்றும் அத்தனகலு ஓயாவின் 5 இடங்களிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் 06 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Related Posts