பருவமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறையா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்துவரும் நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக அதிக கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அதாவது பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் அவரிடம் விடுமுறை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் அதற்கு இன்று மாலைக்குள் முதல்வர் ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறினார்.

Related Posts