நாளுக்கு நாள் அதிகமாகும் மிரட்டல்! விமான பயணிகளுக்கு வந்த புது சச்சரவு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். தற்போது வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதாக விமான போக்குவரத்து துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன் அடிப்படையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட வெ*டிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக தெரிவித்தது. 

இந்த மிரட்டல் தகவல்களை கேட்டவுடன் விமான போக்குவரத்து துறை உடனடியாக அனைத்து விமானங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை சரி பார்க்க வேண்டி உள்ளது. இந்த மிரட்டல் செய்திகளை அறிந்த பயணிகள் விமானத்தில் பயணிப்பதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் இந்த வதந்தியான மிரட்டல்களை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனை கூட்டம் முடிவு செய்துள்ளது. மேலும் இந்த மிரட்டல் அறிவிப்புகள் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மிரட்டல் பின்னணியில் எதுவும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணையும் நடத்தி வருகின்றனர். இவ்வாறு தெரிவித்திருந்தார்

Related Posts