துடிப்பு நின்ற இதயத்தை பொருத்தி ரொறன்ரோ மருத்துவர்கள் சாதனை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொரொன்ரோ பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் ஒரு புரட்சிகரமான மருத்துவ சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இதயத் துடிப்பு நின்ற இதயத்தை ஒரு நோயாளியின் உடலில் வெற்றிகரமாக பொருத்தி, அவருக்கு புதிய வாழ்க்கையை அளித்துள்ளனர்.

பொதுவாக, இதயமாற்று அறுவை சிகிச்சைகளில், மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம், அது துடித்துக்கொண்டிருக்கும்போதே அகற்றப்பட்டு, மற்றொரு நோயாளிக்கு பொருத்தப்படும். ஆனால், இந்த சாதனையில், circulatory criteria (DCC) heart transplant எனப்படும் முறையைப் பயன்படுத்தி, இதயத் துடிப்பு நின்ற இதயத்தை மருத்துவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவக் குழுவில் ஒருவரான டாக்டர் Seyed Alireza Rabi, இதயமாற்று அறுவை சிகிச்சை பெற்ற நோயாளியின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்தார்.

இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக உலகம் முழுவதும் ஏராளமான நோயாளிகள் காத்திருக்கின்றனர். உதாரணமாக, அமெரிக்காவில் மட்டும் 103,000 பேர் இதய தானத்திற்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த புதிய முறை மருத்துவ உலகில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

இந்த சாதனை, இதயமாற்று அறுவை சிகிச்சையில் புதிய சாத்தியங்களை உருவாக்கி, உலகெங்கிலும் உள்ள நோயாளிகளுக்கு நம்பிக்கையை அளிக்கும் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்.

Related Posts