Font size:
Print
கனடியர்களின் தனிநபர் தகவல்களை காவல்துறையினர் எளிதாகப் பெறுவதற்கு உதவும் சட்டமூலத்தில் மாற்றங்கள் செய்யத் தயாராக இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
வியாழக்கிழமை (அக்டோபர் 9) நாடாளுமன்ற குழுவில் பேசிய அமைச்சர், முன்மொழியப்பட்ட எல்லைப் பாதுகாப்புச் சட்டத்தில் தேவையான மாற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார். இந்த சட்டமூலம் காவல்துறையினருக்கு தனிநபர் தகவல்களை எளிதாக அணுகுவதற்கு வழிவகுக்கிறது.
தகுந்த மாற்றங்களுடன் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் என்ற நம்பிக்கையை அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி வெளிப்படுத்தினார்.
Related Posts
