ஒட்டாவா மோசடி: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 பேர் கைது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடாவில் தனிநபர்களுக்கு வந்த அஞ்சல்களைத் திருடியதாகவும், கிரெடிட் கார்டு மற்றும் காசோலை மோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எட்டு பேர் கனேடிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது 344 குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட அனைவரும் 21 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டாவா காவல்துறையின் விசாரணைக் குழு, இந்த மோசடி கும்பலை கண்காணித்து, பல மாதங்களாக சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் கைதுகளை மேற்கொண்டுள்ளது. குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Posts