பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பங்காளாதேஷில் பொதுத் தேர்தல் முன்னிட்டு அரசியல் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக அங்குள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பங்காளாதேஷில் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, இடைக்கால அரசு முகமது யூனுாஸ் தலைமையில் ஆட்சி நடத்தி வருகிறது. எனினும், நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. குறிப்பாக சிறுபான்மை மக்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், பெப்ரவரி 12ம் திகதி பாராளுமன்ற தேர்தலையும், தேசிய வாக்கெடுப்பையும் ஒரே நேரத்தில் நடத்த இடைக்கால அரசு திட்டமிட்டுள்ளது.

 இந்த சூழலில் டாக்காவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் காலத்தில், அரசியல் வன்முறை அல்லது பயங்கரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளது.

பேரணிகள், ஓட்டுச் சாவடிகள் மற்றும் தேவாலயங்கள், கோவில்கள், மசூதிகள் மற்றும் பிற மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் போன்ற மதத் தலங்களை குறிவைத்து தாக்குதல் நிகழக்கூடும்.

அமெரிக்க மக்கள் விழிப்புணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும், மேலும் அமைதியானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்படும்.  ஆர்ப்பாட்டங்கள் அல்லது பேரணிகள் மோதலாக மாறி வன்முறையாக மாறும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
 

Related Posts
©   Thedipaar

கஞ்சா சாரதி கைது!