Font size:
Print
பிரேசிலில் மத விழாவில் பங்கேற்கச் சென்றவர்களின் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள், குழந்தைகள் உட்பட, 20 பேர் உயிரிழந்தனர்.
அலகோவாஸ் மாகாணத்தைச் சேர்ந்த, 60 பேர் மத விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு பேருந்தில் நேற்று திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, சாவோ ஜோஸ் டா டேபெரா என்ற இடத்தில் வளைவில் திரும்பும்போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி கவிழ்ந்தது.
இதனால், சில பயணியர் வெளியே வீசப்பட்டனர்; மற்றவர்கள் பஸ்சின் அடியில் சிக்கிக் கொண்டனர்.
படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related Posts
