உலகளவில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், மெக்சிகோவில் இடம்பெற்ற முக்கிய சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
மெக்சிகோவில் மிகவும் தேடப்பட்ட நபரான போதைப்பொருள் கும்பல் தலைவர் "எல் மெஞ்சோ", கைது நடவடிக்கையின் போது கொல்லப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறையும் ஈடுபட்டிருந்தது. அவர் கொல்லப்பட்டதையடுத்து, மெக்சிகோவில் பரவலாக வன்முறை வெடித்துள்ளது.
எனவே இதுபோன்று எதிர்வரும் காலங்களில் இலங்கையிலும் நடந்து விடுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
கிரிந்த கடற்கரையில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க தகவல் வழங்கிய நபரை கொலை செய்து, அவரது தலையை குறித்த விசாரணையை மேற்கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வீட்டின் முன்வைக்கும் ஒப்பந்தத்தை பொறுப்பேற்ற வாடகை கொலையாளி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிந்த கடற்கரையில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க தகவல் வழங்கிய நபர் தற்போது பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் பல இடங்களில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன.
அதன் பின்னணியில் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் உள்ளனர். எனவே பொலிஸாரின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்கு எதிராக பாதுகாப்பு பிரிவுகள் எவ்வாறு நடவடிக்கை எடுக்கின்றன என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.
இலங்கையில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
