Font size:
Print
அமெரிக்காவின் பொருளாதார முற்றுகை மற்றும் தொடர் தாக்குதல்களுக்கு பதிலடியாக, அமெரிக்காவிற்கு சொந்தமான சுமார் 40 போர் விமானங்களை தாங்கள் அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் செய்தி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த கடல்வழி முற்றுகை (Blockade) இன்று உத்தியோகபூர்வமாக தொடங்கியுள்ள நிலையில், ஈரான் தனது 'இறுதி நடவடிக்கையை' (Final Action) தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பல்கள் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள இராணுவ தளங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில், அதிநவீன போர் விமானங்கள் தரைமட்டமாக்கப்பட்டதாக ஈரானிய ஆதரவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related Posts
