கனடா, மெக்சிகோ மீதான வரிவிதிப்பை ஒத்திவைத்த ட்ரம்ப்: பின்னணி என்ன?

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

மெக்சிகோ, கனடா நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கும் நடவடிக்கையை ஏப்ரல் 2 வரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒத்திவைத்துள்ளார். இதனையடுத்து கனடாவும் அமெரிக்காவுக்கு வரி விதிக்கும் முடிவை நிறுத்திவைத்துள்ளது. இந்தப் பின்னணியில் பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி, பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கை மற்றும் அமெரிக்க ஆட்டோமொபைல் முன்னணி நிறுவனங்களின் தலையீடு ஆகியன இருப்பதாகத் தெரிகிறது.அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜன.20-ம் தேதி 2-வது முறையாக அதிபராக பதவியேற்றார். அதிபர் பதவியேற்ற பிறகு பரஸ்பர வரி குறித்து அவர் அறிவித்தார்.அண்மையில், அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் முதல் முறையாக உரையாற்றியபோதும் ட்ரம்ப் பரஸ்பர வரி குறித்த தனது நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தினார். ஐரோப்பிய யூனியன், இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, கனடா போன்ற நாடுகள், நாம் விதிக்கும் வரியை விட அதிக வரிகளை விதிக்கின்றன. அதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எனவே, மற்ற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கின்றனவோ, அதே அளவுக்கு அமெரிக்காவும் வரி விதிக்கும். அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பது பல ஆண்டுகளாக உள்ளது. இப்போது நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. வர்த்தக கொள்கைகளில் அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் சமமற்ற நிலை உள்ளது. அதை சரி செய்வதற்குதான் பரஸ்பரம் வரி விதிக்கும் முறையை அமல்படுத்த நினைக்கிறேன்.” என்றார். முன்னதாக, மெக்சிகோ மற்றும் கனடாவுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கும் கோப்புகளில் அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டார். இதனால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக அமெரிக்காவின் வளர்ச்சி பாதிக்கும், பண வீக்கம் தாறுமாறாக உயரும் என ட்ரம்ப்பின் முடிவின் மீது அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ட்ரம்ப் வரி விதிப்பை ஒரு மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளார். இந்நிலையில், “அமெரிக்கா - மெக்சிகோ - கனடா ஒப்பந்தத்தை ஏற்று கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படாது. எனினும், இது ஒருமாத காலத்திற்கு மட்டும் தான் அமலில் இருக்கும்.” என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

Related Posts