மகாராஷ்டிரா படகு விபத்தில் படகு விபத்தில் தமிழர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா ஜபல்பூரில் நகரில் உள்ள நர்மதை நதியின் குறுக்கே அமைந்துள்ள பார்கி அணையில், சுற்றுலா பயணிகளுடன் சென்ற சொகுசு படகு திடீரென கவிழ்ந்ததில், 29 பேர் நீரில் விழுந்து தத்தளித்தனர்.
இதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 6 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 15 பேரை மீட்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ள நிலையில், மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடனே, போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்துக்கு பலத்த காற்றால் நீர் கொந்தளிப்பாக மாறியதே காரணமாக இருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து முதல்வர் மோகன் யாதவ் அதிர்ச்சி தெரிவித்து, மீட்பு பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்த துயரச் சம்பவம், சுற்றுலா பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
