இந்தியா வரும் ட்ரம்ப்பின் மகள்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்பின் மகள் டிஃபானி டிரம்ப் தனிப்பட்ட பயணமாக இந்தியாவுக்கு இன்று (மே 30) வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து தில்லிக்கு விமானத்தில் வரும் அவா், அங்கிருந்து தனி விமானத்தில் ஆக்ரா செல்வுள்ளதாகவும் காலையில் தாஜ்மஹாலை சுற்றிப் பாா்க்கிறாா் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அங்கிருந்து பிற்பகலில் தனி விமானத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுற்றுலா நகரான ஜெய்சால்மா் செல்கிறாா்.

 ட்ரம்ப் மகள் வருகையை முன்னிட்டு ஆக்ரா, ஜெய்சால்மா் உள்ளிட்ட அவா் பயணிக்கும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ட்ரம்பின் மற்றொரு மகள் இவான்கா டிரம்ப், அவரின் கணவா் ஜெராட் குஷ்னா் உள்ளிட்ட அதிபரின் குடும்ப உறுப்பினா்கள் பலா் அமெரிக்க அரசு நிா்வாகத்தில் சில முக்கியப் பொறுப்புகளை வகிக்கின்றனா்.

ஆனால், டிஃபானி டிரம்ப், அதிபா் தோ்தலுக்கான பிரசார நேரத்தில் மட்டும் ட்ரம்புக்கு ஆதரவாகப் பணியாற்றினாா்.

ட்ரம்ப் அதிபரான பிறகு அரசுப் பொறுப்புகள் எதையும் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி