ஈரான் உலகக் கிண்ண அணிக்கு கட்டுப்பாடுகள்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்லும் ஈரான் கால்பந்து அணியினர், போட்டி நடைபெறும் அதே நாளில் அமெரிக்க மண்ணுக்குள் நுழைந்து, போட்டி முடிந்த சில மணித்தியாலங்களிலேயே அங்கிருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்கா கடுமையான விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கை காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான பதற்றம் நிலவி வருகிறது.

இதன் காரணமாக, ஈரான் கால்பந்து அணி தனது உலகக் கிண்ணப் பயிற்சிகளுக்காக முதலில் அமெரிக்காவின் அரினோசா (Arizona) மாகாணத்தில் உள்ள டக்சன் (Tucson) நகரைத் தேர்வு செய்திருந்தது.

எனினும், தற்போதைய போர்ச் சூழலால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டு, ஈரான் அணி தற்போது மெக்சிகோவில் முகாமிட்டுள்ளது.

இந்த விசா கட்டுப்பாடுகள் குறித்து மெக்சிகோவிற்கான ஈரானிய தூதுவர் அபுல்பஸ்ல் பசந்திதே (Abolfazl Pasandideh) செய்தியாளர்களிடம் விபரிக்கையில், "அமெரிக்காவின் விசா கட்டுப்பாடுகளின்படி, ஈரான் அணியினர் போட்டி நடைபெறும் நாள் அன்று காலையில்தான் அமெரிக்காவிற்குள் நுழைய முடியும். அதேபோல் போட்டி முடிந்த அன்றைய தினமே அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும்." என்று அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரான் கால்பந்து அணி, உலகக் கிண்ணத் தொடரின் குழு நிலைப் போட்டிகளில் (Group Stage Matches) மூன்று போட்டிகளை அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சியாட்டல் ஆகிய நகரங்களில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று போட்டிகளின் போதும் ஈரான் அணியினர் இதே கடுமையான விசா விதிமுறைகளையே பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்