Font size:
Print
மறு அறிவித்தல் வரும் வரை ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், தற்போது ஈரானில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தி இந்தியா புதிய பயண ஆலோசனையை விடுத்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து, டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இந்த அவசர ஆலோசனையை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய, ஈரானில் தீவிரமடைந்து வரும் போர் மோதல் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, எந்தவொரு பயணத்திற்காகவும் ஈரானுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Related Posts
