நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தொடர்பாக தனது கடுமையான கண்டனத்தையும் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைப்படைப்பு என்ற பெயரில் வரலாற்றைத் திரித்து தமிழர்களை இழிவுபடுத்தும் எந்தவொரு முயற்சியும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் இறையோனான முருகப்பெருமானின் வரலாற்றைத் திரித்து, அவர் வடபுலத்தில் பிறந்தவர் என திரைப்படத்தில் சித்தரிக்கப்படும் பட்சத்தில், அதற்கு கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும் எனவும் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் அரசியல் தரப்புக்களிலும் கவனம் பெற்று வரும் நிலையில், திரைப்பட தயாரிப்புக் குழுவினரிடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வ பதில் எதுவும் வெளியாகவில்லை.
Font size:
Print
Related Posts
