ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் உடல், மஷ்ஹத் நகரிலுள்ள இமாம் ரெசா நினைவிடத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதலில் கடந்த பிப்ரவரி மாதம் காமேனி உயிரிழந்ததாகவும், தொடர்ந்து நிலவிய போர் சூழ்நிலையால் இறுதிச்சடங்கு தாமதமானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், அமெரிக்கா – ஈரான் இடையே ஏற்பட்டிருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னரும் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட தாக்குதல்கள் காரணமாக மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
வர்த்தக எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் பல இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சமூகம் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
Font size:
Print
Related Posts
