பேருந்துகள் தொடர் சோதனை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக இயக்கப்படும் பேருந்துகள் மீது காவல்துறை நாடு தழுவிய அளவில் தீவிர நடவடிக்கைகளைத் ஆரம்பித்துள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மண்ணெண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் சுமார் 100 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பல பேருந்து நடத்துநர்கள் மீது ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,வழக்குகளும்; பதிவு செய்யப்படவுள்ளன.

பேருந்துகளிலிருந்து சேகரிக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகள், உறுதிப்படுத்துவதற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஆய்வகப் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்கிடமான முறையில் அதிக அளவில் மண்ணெண்ணெய் கொள்முதல் செய்வதைத் தவிர்க்கவும், பயணிகள் பேருந்துகளுக்கு அதை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களிடம் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அனைத்து காவல் நிலையங்களுக்கும் இத்தகைய பேருந்துகளைக் கண்டறிந்து தொடர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts
©   Thedipaar

எகிறியது எண்ணை விலை

©   Thedipaar

கனடாவில் அவசரநிலை