பாகிஸ்தான் சுரங்க வெடிவிபத்து: 32 பேர் உயிரிழப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில், இதுவரை 32 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குவெட்டா நகரின் புறநகர் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, மீத்தேன் வாயு கசிவால் திடீரென ஏற்பட்ட வெடிப்பு சுரங்கத்தின் ஒரு பகுதியை இடிக்கச் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை ஆரம்பித்தனர்.

இதுவரை 32 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 10 தொழிலாளர்கள் சுரங்கத்தின் ஆழமான பகுதியில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இடிபாடுகள் அதிகமாக இருப்பதால் மீட்புப் பணிகள் மிகவும் சவாலானதாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிக்கியுள்ளவர்களை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த துயரச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.


 

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை