பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அல்வா கொடுத்த விசித்திரா

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ரவீனா மற்றும் நிக்சன் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள். முக்கியமாக ரவீனாவுக்கு அதிக எதிர்ப்புகள் இருந்தன. காரணம் அவர் செய்த செயல்கள் பார்ப்போரை கடுப்பேற்றும் வண்ணம் இருந்தது. தற்போது பிக்பாஸ் 7 வீட்டில் நாம் அனைவரும் எதிர்ப்பார்த்த பணப்பெட்டி டாஸ்க் நடந்து வருகிறது. ரூ. 9 லட்சம், ரூ. 13 லட்சம் இப்போது ரூ. 15 லட்சம் வரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது.இந்த பணப்பெட்டியை விஜய் வர்மா, தினேஷ், மணி, பூர்ணிமா இவர்களில் யாராவது எடுத்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. காரணம் மாயா, தினேஷ், விஷ்ணு, அர்ச்சனா என இவர்களுக்கு தங்கள் மீது நம்பிக்கை அதிகமாக உள்ளதால் கண்டிப்பாக இவர்கள் பணப்பெட்டியை எடுத்து செல்ல மாட்டார்கள் இந்த நிலையில் விசித்ரா புத்திசாலித்தனமாக எல்லோருக்கும் அல்வா கொடுத்துவிட்டு முந்திக்கொண்டார். அதாவது விசித்ரா ரூ. 13 லட்ச பணப்பெட்டியுடன் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Posts