வத்தளை பாடசாலையில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிப்பு !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வத்தளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாடசாலை வத்தளை பொலிஸ் பிரிவிற்குள் அமைந்திருந்த போதிலும் மஹாபாகே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த அறையில், டி-56 துப்பாக்கி, 125 தோட்டாக்கள், 4 மெகசின்கள், 18 9எம்எம் தோட்டாக்கள், பல கைத்தொலைபேசிகள் மற்றும் பொலிஸ் சீருடை என்பன காணப்பட்டன.

குறித்த ஆயுதங்கள் திட்டமிட்ட குற்றவாளியான ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்பவருடையது என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Related Posts