சரக்கு கப்பலை கடத்திய சோமாலியா கடற்கொள்ளையர்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சோமாலியா கடற்கரை அருகே 15 இந்திய பணியாளர்களுடன் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை மீட்பதற்காக ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் விரைந்துள்ளது.

லைபீரிய நாட்டு கொடியுடன் பயணித்து வந்த அந்தக் கப்பல், பிரேசில் நாட்டில் இருந்து பக்ரைன் நாட்டை நோக்கி சரக்குகளுடன் பயணித்துக் கொண்டிருந்தது.

கடந்த 30ம் தேதிக்கு பிறகு அந்த கப்பலுடனான தகவல் தொடர்பை இழந்துவிட்டதாக வெசல் பைண்டர் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய தகவல்களின்படி அந்த கப்பலில் 15 க்கும் மேற்பட்ட இந்திய பணியாளர்கள் உள்ளனர்.

கப்பலில் இருக்கும் பணியாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர விரைந்து வருவதாகவும் இந்திய கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts