Font size: 15px12px
Print
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெவ் அலடிஸ் (Geoff Allardice), விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை சந்தித்தார்.
இந்த நாட்டில் கிரிக்கட் தொடர்பில் நாம் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கக்கூடிய விசேட சந்திப்பாக இது அமைந்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி இன்று(10) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் இலங்கையின் கிரிக்கெட் மற்றும் அது குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related Posts