தன் சாவு எப்படி இருக்க வேண்டும்?- இயக்குனரிடம் கூறிய விஜயகாந்த்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜயகாந்த் மரணம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்கே கடும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில், ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். விஜயகாந்த் மதுரையில் பணக்கார வீட்டு மகனாக வளர்ந்தும் கூட, சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து, அதன்பின் தனது திறமையை நிரூபித்து ஜெயித்தவர். இன்றும் கூட அவர் வாய்ப்பு தேடி அலைந்த போது தங்கியிருந்த விடுதி அறையை பூஜை அறையாக மாற்றி அன்றாடம் வணங்கி வருகிறார். அவரது அந்த விடுதி அறையில், பெருமாள்,இயேசு, அல்லா என எல்லா மத புகைப்படத்தையும் வைத்து எல்லாவற்றிற்க்கும் மாலை அணிந்து வணங்கி வருகிறார். சில வருடங்களுக்கு முன்னர் அந்த காணொளி கூட வைரலானது

இந்த நிலையில், விஜயகாந்த் தன்னிடம் சொன்ன ஒரு விஷயத்தை பற்றி பிரபல தயாரிப்பாளர் டி.சிவா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். எம்ஜிஆர் இறந்தபோது அவரை பார்க்க ஏராளமானோர் கண்ணீருடன் சென்றார்கள். மக்கள் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதுகொண்டு செல்வதை பார்த்து விஜயாகாந்த் ஒன்று சொன்னது என் நினைவில் இருக்கிறது. செத்தா இப்படி சாகனும் என விஜயகாந்த் சொன்னார். அவர் சொன்னது தற்போது அவருக்கே நடந்தது என டி.சிவா கூறி இருக்கிறார். விஜயகாந்த் இறந்த போதும் ஆண், பெண் என அனைவரும் ரோட்டில் நெஞ்சு நெஞ்சாக அடித்துக்கொண்டு அழுதார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts