வாய்ப்பு கொடுத்தவர்களை வைத்து செய்யும் வடிவேலு!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

சினிமாவிலும், அரசியலிலும் தனக்கு என்ற ஒரு இடத்தை பிடித்த விஜயகாந்த், மக்கள் மனதிலும் நிலையான இடத்தை பிடித்துவிட்டு இவ்வுலக வாழ்வை விட்டு போனார்.அவர் இறந்து ஒரு வாரம் ஆனாலும் கூட மக்கள் அவரது நினைவிடத்திற்கு வந்து கொண்டே இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லாரிலாரியாக மக்கள் வருகிறார்கள். அவர் மீது உள்ள பற்றை நினைத்து பெருமை கொள்ளாமல் இருக்க முடியாது. இணையத்தில் பல நடிகர்கள் விஜயகாந்த் தனக்கு செய்த உதவி பற்றி முன்வந்து கூறி நெகிழ்கிறார்கள். பல நடிகர்களுக்கு வாழ்க்கையே அமைத்து கொடுத்துள்ளார். குறிப்பாக வடிவேலுவின் சினிமா பயணத்திற்கு விஜயகாந்த் ஒரு முக்கிய பங்காக இருந்துள்ளார். ஆனால் அவர் இறப்பிற்கு வடிவேலு ஒரு அறிக்கை கூட விடவில்லை என்பது ரசிகர்களின் பெரிய வருத்தமாக உள்ளது. 

வடிவேலு பட வாய்ப்பு தேடிக்கொண்டு இருக்கும்போது அவருக்கு பட வாய்ப்பு தந்து பிரபலங்களில் ஒருவர் ராஜ்கிரண். அவரையே அவமதிக்கும் வண்ணம் நடந்துள்ளார் வடிவேலு! அண்மையில் கலைஞர் 100 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்களை அழைத்து செல்ல பேட்டரி கார்கள் தனியே வந்துள்ளன. ராஜ்கிரண் வந்த பேட்டரி காரில் ராஜ்கிரணுக்கு அருகே அமரும் சூழல் வடிவேலுவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடுப்பாகிய வடிவேலு, உடனடியாக அந்த பேட்டரி காரை நிறத்த சொல்லிவிட்டு காரில் இருந்து வடிவேலு இறங்கிவிட்டாராம். வாய்ப்பு கொடுத்தவரை அவமதிப்பதே இவருக்கு வேலையாகிவிட்டது என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

Related Posts