திடீரென மொட்டை அடித்துக்கொண்ட பிரபல நடிகை! ஏன்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை சுரேகவாணி தெலுங்கு சினிமாவில் ஏராளாமான படங்களில் அம்மா, அக்கா ரோல்களில் நடித்து வருபவர். தமிழிலும் அவர் எக்கச்சக்க படங்களில் நடித்து இருக்கிறார்..கடந்த 2019ல் சுரேகாவாணியின் கணவர் சுரேஷ் தேஜா உடல்நலக்குறைவால் காலமானார். இவருகென்றே தெலுங்கு சினிமாவில் ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது மகள் உடன் சுரேகாவாணி தொடர்ந்து மாடர்ன் உடைகளில் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அவரது மகளை ஹீரோயின் ஆக்கும்படி ரசிகர்களும் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.தற்போது சுரேகா வாணி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று அங்கு மொட்டை அடித்துக்கொண்டிருக்கிறார்.அவர் முடி இல்லாமல் வெளியிட்டு இருக்கும் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

ஒருநடிகை இது போன்று மொட்டை அடித்து அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து கொள்வது இதுவே முதல்முறை. பல நடிகைகள் உடல் எடை கூடினால் கூட அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். அப்படி இருக்க சுரேகவாணியின் இந்த புகைப்படம் இணையத்தில் பாராட்டு பெற்று வருகிறது. ஒரு நடிகை அழகாக இருந்தால் தான் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை உடைத்து எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்பவர்களே உண்மையான ரசிகர் என்பதை சுரேகவாணி நிரூபித்துவிட்டார்.

Related Posts