விஷாலுக்கு திடீரென பிறந்த ஞானோ உதயம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சமீபத்தில் நடிகர் விஷால் USA இருந்து வந்தவுடனே மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு இடத்தில் மரியாதை செலுத்தியும் அதன்பிறகு அவரின் இல்லத்திற்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி இருந்தார். உடனே மீடியா நண்பர்களுக்கு பேட்டி கொடுத்தார். மேலும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைக்க போவதாக கூறி இருந்தார். அதன் பின் அன்று மாலையே ரத்னம் படப்பிடிப்பிற்காக திருப்பதி சென்று தயாரிப்பு தரப்பினர் மூன்று நாட்களுக்கு திட்டமிட்டு இருந்த படப்பிடிப்பை நடிகர் விஷால் அவர்களின் ஒத்துழைப்பில் இரண்டே நாட்களில் முடித்து கொடுத்துள்ளார். 

விஷால் அவர்களின் இந்த செயல்பாடு தயாரிப்பாளருக்கு ஒரு நாள் படப்பிடிப்பிற்கு ஆகும் 30லட்சம் செலவை சேமித்து கொடுத்துள்ளது. இந்த செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பயங்கர வைரலாக பேசப்பட்டு வருகிறது. இதில் என்ன இருக்கு என்று தானே நினைக்கிறீர்கள்? ஏன் என்றால், விஷால் பெரும்பாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒத்துழைப்பு கொடுக்கமாட்டார் என்ற செய்தியை தானே பெரும்பாலும் கேள்விப்பட்டிருப்போம்? ஆனால் இப்போது மனுஷன் தீயாய் வேலை செய்கிறார். ஞானோ உதயம் பிறந்துவிட்டது போல!

Related Posts