பொருளாதார நெருக்கடியால் களையிழந்துள்ள பொங்கல் கொண்டாட்டம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பொருளாதார நெருக்கடி மற்றும் வரி அதிகரிப்பு உட்பட்ட காரணங்களாலும் அதே நேரம் பொருட்களின் விலை வீழ்சியடையாமையினாலும் மன்னார் மாவட்டத்தில் இவ் வருடமும் பொங்கல் கொண்டாட்டம் மற்றும் பொங்கல் வியாபாரம் கலையிழந்து காணப்படுகின்றன

மக்கள் பொருள் கொள்வனவு மற்றும் ஆடை கொள்வனவில் அதிகளவு ஆர்வம் காட்டாத நிலையில் மன்னார் மாவட்டத்தில் வீதிகள் மற்றும் விற்பனை நிலையங்கள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்றது.

ஒரு சில கடைகளில் மாத்திரம் கரும்புகளையும் பொங்கல் விற்பனை பொருட்களையும் காணக்கூடியதாக உள்ள போதும் அந்த கடைகளும் மக்கள் வரவில்லாமல் வெறிச்சோடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related Posts