காதலிக்காக பெண் வேடத்தில் தேர்வெழுதிய ஆண் நபர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பஞ்சாப்பின் பரீத்கோட் மாவட்டத்தில் கோத்காபுரா நகரில் உள்ள பாபா பரீத் பல்லைக்கழகத்தில் சுகாதார பணியாளர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில், சந்தேகத்திற்குரிய வகையில் ஒருவர் தேர்வெழுதி உள்ளார். 

இளம்பெண் போன்று காணப்பட்ட அவரிடம் பயோமெட்ரிக் உபகரணங்கள் உதவியுடன் சோதனை நடத்தியபோது, அவர் ஆண் என்பதும் அவருடைய பெயர் ஆங்ரேஸ் சிங் என்பதும் தெரிய வந்தது.

பசில்கா பகுதியைச் சேர்ந்த அவர், ஆதார் மற்றும் வாக்காளர் அட்டைகளை மோசடியாகப் பயன்படுத்தி போலியான அடையாள அட்டைகளை உருவாக்கி தேர்வு எழுதியது விசாரணையில் தெரிய வந்தது. தன்னுடைய காதலி பரம்ஜித் கவுருக்காக அவர் இத்தகைய செயலை செய்துள்ளார்.

Related Posts