நடிகர் வடிவேலுவை கிழித்து தொங்கவிடும் சகநடிகர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் வடிவேலு பற்றி சமீபகாலமாக அவருடன் சேர்ந்து நடித்த சக நடிகர் நடிகைகள் அவர் மீது குற்றச்சாட்டு முன் வைத்து வருகின்றனர்.இந்நிலையில் வடிவேலுடன் இணைந்து நடித்த சிங்கமுத்து நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறுகையில், ஒரு மனிதன் நல்ல குடும்பத்தில் பிறந்திருக்கணும், நல்ல நண்பர்களை வைத்திருக்க வேண்டும். நல்ல நூல்களை படித்திருக்க வேண்டும். இது மூன்று விஷயமும் வடிவேலு கிட்ட இல்லை.வளர்ப்பு சரியில்லை.நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு வந்தியா? மனோபாலா கூட சுத்திட்டு இருந்த ஆனால் அவர் இறப்புக்கு வந்தியா? மயில்சாமி இறப்புக்கும் வரல? யாராவது செத்த தண்ணியபோட்டு சந்தோசம் இருப்பார். இவருக்கு அடுத்த வருஷம் தெரியும் ஜாதகப்படி. நிஜ வாழ்க்கையில் வடிவேலு வில்லன் என்று சிங்கமுத்து கூறியுள்ளார்.

இவர் சொல்வதும் ஓரளவு உண்மை தான். ஏனெனில் தன்னுடைய சகநடிகர்களுக்கு உதவவும் இல்லை, அவர்களது இறுதி சடங்கிற்கும் செல்வதில்லை. தன்னுடைய ரசிகர்களுக்கு ஆவது உதவுவாரா என்றால் அதுவும் இல்லை. சரி தன்னை தூக்கிவிட்டு வாய்ப்பு தந்தவர்களையாவது மதிக்கிறாரா? என்றால் அதுவும் இல்லை. திமுகவுடன் சேர்ந்துகொண்டு, தன்னை அறிமுகம் செய்த விஜயகாந்தை முடிந்த அளவு கிழித்து எடுத்தார். அதேபோல் தன்படத்தில் வாய்ப்பு தந்த ராஜ்கிரணையும் பொதுவெளியில் கண்டுகொள்ளாமல் சென்ற செய்தியை கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்படி இவர் என்ன மாதிரியான மனிதர் என்ற ஆவல், சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமில்லை பொதுமக்களுக்கும் உண்டு.

Related Posts