காட்டுப்பகுதியிலிந்து எரிந்த நிலையில் மீட்கப்பட்ட கார்

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

காட்டுப்பகுதியிலிந்து எரிந்த நிலையில் மீட்கப்பட்ட கார் - பிக்கு கொலையுடன் தொடர்பு

பிக்கு ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர்கள் பயணித்ததாக கூறப்படும் கார் ஒன்று கடுவலை கொடெல்ல பிரதேசத்தின் காட்டுப்பகுதியில் வைத்து இன்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த கார் முழுவதுமாக தீக்கிரையாகி காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதேவேளை, விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற காரின் இலக்கமான CAO-5345 என்ற இலக்கத்தை கொண்ட வெள்ளை நிற மோட்டார் வாகனமொன்று பாணந்துறை எலுவில பிரதேசத்தில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் இருந்து கண்டுபிடித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் கம்பஹா, மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை வளாகத்திற்குள் மோட்டார் வாகனமொன்றில்  நுழைந்த நான்கு சந்தேக நபர்கள் அங்கிருந்த தேரர்களிடம் இங்கு ஜாதகம் பார்க்கும் தேரர் யார் என வினவியுள்ளனர். இதன்போது, சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் என்று கூறி துப்பாக்கிச் சூட்டௌ மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றதாக விகாரையின் தேரர் ஒருவர் தெரிவித்தார்.துப்பாக்கி குண்டுகள் அவரது இடது கை மற்றும் மார்பில் தாக்கியதுடன், காயமடைந்த தேரர் உடனடியாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எவ்வாறாயினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வணக்கத்துக்குரிய கலபலுவாவே தம்மரதன என்ற 44 வயதுடைய தேரரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்

Related Posts