பூமியை நோக்கி வரும் அபாய கோள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சுமார் 890 அடி விட்டம் கொண்ட, அபாயகரமான சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

2008 OS 7 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறுகோள், இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.41 மணிக்கு எமது கிரகத்தை 1,770,000 மைல் தொலைவில் கடந்து செல்லும் என நாசா தெரிவித்துள்ளது.

அபாயகரமான இந்த சிறுகோள், சுமார் 890 அடி விட்டம் கொண்டதாகும்.

என்றாலும், இந்த சிறுகோள் பூமியின்மீது மோதும் அபாயம் இல்லை என நாசா கூறியுள்ளது.

அறிவியலாளர் ஒருவர் இது குறித்துக் கூறும்போது, இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் வருவதுபோல் தோன்றினாலும், அது பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையாது என்பதால், அதைக்குறித்து அதிகம் கவலைப்படவேண்டியதில்லை என்கிறார்.

நமது சூரிய அமைப்பில், அபாயகரமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 2,350 சிறுகோள்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.  

Related Posts