குழந்தைகளை பலாத்காரம் செய்தால் ஆண்மை நீக்கம்? மிரள வைக்கும் தண்டனை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கிழக்கு ஆப்பிரிக்க தேசமான மடகாஸ்கரில் மாதந்தோறும் நூற்றுக்கும் மேலான குழந்தைகள் மற்றும் சிறார்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி வருகிறார்கள். கடந்தாண்டு 600க்கும் மேலான குழந்தை பலாத்காரங்கள் வழக்காக பதிவாக, இந்தாண்டு ஜனவரியில் மட்டுமே 133 வழக்குகள் பதிவாகி உள்ளன.

குழந்தை பலாத்காரங்களை அடையாளம் காண்பது கடினம்; அப்படியே அடையாளம் காணப்பட்டாலும், அவை புகாராக பொதுவெளியில் கொண்டு வருவதும் குறைவு. இந்த வகையில் குழந்தை பலாத்காரங்களின் எண்ணிக்கை, தரவுகளில் இருப்பதை விட பல மடங்கு அதிகம் என மடகாஸ்கர் அரசு அஞ்சுகிறது. எனவே அதிரடியாக ஒரு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

இதன்படி குழந்தை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் ஆண்மை நீக்கம் செய்யப்படுவார்கள். அதிலும் பாதிக்கப்பட குழந்தையின் வயது 10க்கு உள்ளாக இருப்பின் குற்றவாளிகளுக்கு காஸ்ட்ரேஷன் அறுவைசிகிச்சை செய்யப்படும். 

10 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறார் மீதான பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு, அறுவை சிகிச்சை அல்லது கெமிக்கல் காஸ்ட்ரேஷன் உண்டு. 14 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறார் பாதிக்கப்பட்டால், ரசாயன காஸ்ட்ரேஷன் தண்டனை பாயும். இது தவிர்த்து கூடுதலாக ஆயுள் சிறை வரை கடுமையான தண்டனையும் தனியாக விதிக்கப்படும்.

காஸ்ட்ரேஷன் என்பது ஆணின் விதைகள் அகற்றப்படுவதை குறிக்கிறது. அறுவை சிகிச்சை மூலம் விதைகள் அகற்றப்படுவதால், ஆண்மைக்கான டெஸ்டோஸ்டிரோன் எனப்படும் ஹார்மோன் சுரப்பு நிரந்தரமாக நீக்கப்படுகிறது. 

இதுவே கெமிக்கல் காஸ்ட்ரேஷன் என்பது பாலியல் ஆசையைக் குறைக்கும் மருந்துகளைப் பயன்படுத்தி, ஹார்மோன் சுரப்பைத் தடுப்பதாகும். மருந்துகளை நிறுத்துவது அல்லது மாற்று மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் இது பொதுவாக மீளக்கூடியது.

மடகாஸ்கர் அதிரடியாக இயற்றியிருக்கும் ஆண்மை நீக்க சட்டத்தை பொதுவெளியில் பலரும் வரவேற்று வருகின்றனர். 

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் | Thedipaar News

Related Posts