மகளை துண்டுகளாக நறுக்கி உணவகம் கொண்டு சென்ற கொடூரத் தந்தை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

5 வயது மகளை அடித்தே கொன்றதுடன், சடலத்தை மறைக்க அதனை துண்டுகளாக நறுக்கி, தான் பணிபுரியும் உணவகத்தில் மறைத்து வைத்தது உட்பட பல்வேறு கொடூரங்களை அரங்கேற்றிய ஒரு கொடூர தந்தையின் பின்னணியை அமெரிக்க போலீஸார் பொதுவெளிக்கு தெரிவித்துள்ளனர்.

காரை அசுத்தம் செய்ததற்காக, போதையில் உச்சத்தில் இருந்த ஆடம் பலமுறை குத்துக்கள் விட்டதில், அந்த சிறுமி இறந்திருக்கிறார். சிறுமி சடலத்தை சிறு துண்டுகளாக நறுக்கியவர், அவற்றை தினமும் கொஞ்சமாக தான் பணியாற்றும் உணவகத்துக்கு எடுத்துச் சென்றார். 

அங்கே உணவுகள் கெடாதிருக்க சேமிக்கப்படும் பெரும் கொள்கலனில் பையை வைத்திருப்பார். பின்னர் முந்தை தினத்தின் குப்பைகள் என்ற பெயரில் உணவகத்தின் குப்பைகளோடு, மகள் சடலத்தின் எச்சங்களை கலந்து விடுவார்.

ஆடமின் மகள் காணாது போய் 2 வருடங்கள் வரை போலீஸார் இந்த கொடூர பின்னணியை அறிந்திருக்கவில்லை. கணவரிடமிருந்து பிரிந்து வாழும் ஆடமின் மனைவி கைலா தெரிவித்த தகவல்களை அடுத்தே போலீஸார் ஆடமை வளைத்தனர். 

கொடூர கொலை, ஆயுதங்களை பயன்படுத்தியது, சாட்சியங்களை கலைத்தது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் ஆடம் 30 ஆண்டு சிறைக்கு ஆளாகி உள்ளார்.

Related Posts