பிரபல நடிகை கணவரை பிரிந்துவிட்டாரா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சன் டிவியின் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா.அந்த தொடருக்கு பிறகு ஜீ தமிழில் சீதா ராமன் என்ற சீரியலில் அவர் நடித்தார். அந்த நேரத்தில் தான் அவர் காதலித்து வந்த ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் சீக்ரெட்டாக நடந்து முடிந்தது. பெரிதும் ஆடம்பரம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் எளிமையாக கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள்.

அதன் பிறகு சீதா ராமன் சீரியலில் இருந்து பிரியங்கா முற்றிலுமாக வெளியேறினார். அடிக்கடி கணவர் வீடான மலேசியா சென்று வர முடியாததால் இந்த முடிவு என சொல்லப்பட்டது. அதற்கு பிறகு தற்போது ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் பிரியங்கா,  இன்ஸ்டாபக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படம்  அனைத்தையும் நீக்கிவிட்டார். மேலும் நீங்க சிங்கிளா என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு ஆமாம் என இன்ஸ்டாவில் பதில் அளித்திருக்கிறார் அவர்.

அதனால் ஒரே வருடத்தில் கணவரை அவர் பிரிந்துவிட்டாரா என தகவல் பரவி வருகிறது. இந்த பிரிவுக்கு என்ன காரணம் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.  வேகமாக திருமணம் செய்து கொள்கிறார்கள் அதே கையோடு விவாகரத்தும் செய்து கொள்கிறார்கள்.

 

 

Related Posts