நடிகர் அரவிந்த்சாமி தத்து கொடுக்கப்பட்ட குழந்தையா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் அரவிந்த் சாமியை பார்த்து விரும்பாத பெண்களே இருக்க முடியாது. ஒரு காலத்தில் மாப்பிள்ளை வேண்டும் என்றால் அரவிந்த் சாமி போல தான் வேண்டும் என்று பெண்கள் அடம்பிடித்த காலமும் உண்டு. பல ஆண்டுகளுக்கு பின்னர் சினிமாவில் இவர் மீண்டும் கம்பேக் கொடுத்தது வரவேற்பை பெற்றது. இப்போது இவர் குறித்த தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகர் அரவிந்த் சாமி பிறந்த உடனேயே தத்து கொடுக்கப்பட்டவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.சித்தி, மெட்டி ஒலி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருக்கும் டெல்லி குமார் தான் அரவிந்த் சாமியின் நிஜ அப்பாவாம். இதை இவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

டெல்லி குமாரின் தனது அக்காவுக்கு அரவிந்த் சாமியை தத்து கொடுத்துவிட்டாராம்.
எப்போவாவது வீட்டில் எதாவது விழா என்றால் மட்டும் அரவிந்த் சாமி வந்துவிட்டு போவார் அவ்வளவு தான் என நடிகர் டெல்லி குமார் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

Related Posts