நெதர்லாந்து முன்னாள் பிரதமர், மனைவி கருணைக்கொலை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நெதர்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமரும், அவரது மனைவியும் விஷ ஊசி செலுத்தப்பட்டு கருணைக்கொலை செய்யப்பட்டனர்.

1977 முதல் 1982-ஆம் ஆண்டு வரை நெதர்லாந்து பிரதமராக இருந்தவர் திரீஸ் வான் ஹாட். 

70 ஆண்டுகளுக்கு முன் யூஜினி என்பவரை அவர் மணமுடித்தார். 

இருவருக்கும் 93 வயது ஆன நிலையில், உடல்நிலை மோசமடைந்து மிகவும் அவதியுற்றுவந்ததால், தங்களை கருணைக்கொலை செய்துவிடுமாறு தெரிவித்தனர். 

உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல், தாங்க முடியாத துயரை அனுபவித்துவருபவர்களை கருணைக்கொலை செய்ய நெதர்லாந்து சட்டம் அனுமதி அளிக்கிறது.

Related Posts