மனைவி மீது கரண்ட் ஷாக் வைத்து கொலை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹமீது - ஹாத்தூண் தம்பதியினர். இந்நிலையில் ஹமீதிற்க்கு தனது மனைவி நடத்தையில் தொடர் சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் தனது மனைவி வேறொரு நபருடன் தொடர்பில் இருப்பதாக கூறி அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு ஹாத்தூண் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர் மீது மின்சாரம் பாயச்செய்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தனது தாய் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் முகமது நதீம் தனது தாயின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொள்வதை அறிந்த ஹாத்தூணின் கணவர் ஹமீது தலைமறைவாகி உள்ளார்.

Related Posts