சரத்குமாரின் முதல் மனைவி பரபரப்பு பேட்டி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சரத்குமார். இவர் சாயாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு பிறந்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார்.வரலட்சுமி இப்போது சினிமாவில் பயங்கர பிசியாக உள்ளார். தனது அப்பாவையே விஞ்சும் அளவிற்கு இவரது நடிப்பு உள்ளது. சரத்குமாரின் மகளா இவர்? என்ற கேள்வி போய், வரலட்சுமி அப்பா தானே சரத்குமார் என்பதற்கு ஏற்ப தனது திறமையை நிரூபித்து வருகிறார். சில தனிப்பட்ட காரணத்தால் சரத்குமார் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின் சரத்குமார் ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் சரத்குமாரின் முதல் மனைவி சாயா விவாகரத்து குறித்து எமோஷனலாக பேசியுள்ளார். 

அதில் அவர் பேசுகையில், திருமணம் செய்து கொள்வதற்கு இதுதான் வயது என்று எதையும் நாம் குறிப்பிட்டு சொல்ல முடியாது. திருமணம் செய்வதற்கு மனதளவில் சரியாக இருக்க வேண்டும். திருமணம் என்பது ஒரு பயணம் அதில் நீங்கள் சரியாக பயணிக்க வேண்டும் என்றால் அனைத்து தளங்களிலும் கொஞ்சம் உயர்ந்த நிலையை அடைந்திருக்க வேண்டும். சிலர் உடல் தேவைக்காக திருமணம் செய்துகொள்கிறார்கள். அதெல்லாம் உண்மையான திருமணமே கிடையாது என்று சாயா கூறியுள்ளார்.

Related Posts